என் மலர்
- விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்.
- பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுரன்கோட் பகுதியில் விமானப்படை வீரர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் சென்று கொண்டிருந்தது. இரண்டு வாகனங்கள் சென்றபோது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உதம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
#WATCH | Pooch, J&K: Vehicle checking underway at Pooch Highway after a terrorist attack on an Indian Air Force convoy, earlier this eveningOne IAF soldier has succumbed, one is critical and the other three are stable and undergoing treatment. pic.twitter.com/t7VRty9BwM
— ANI (@ANI) May 4, 2024
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர். தீவிரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதியாக செல்லும் வாகனங்களை மறித்து போலீசார், பாதுகாப்புப்படை வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- டு பிளிஸ்சிஸ் 23 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- விராட் கோலி 27 பந்தில் 42 ரன்களில் எடுத்து அவுட் ஆனார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 147 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதனால் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. டு பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி முதல் ஓவரில் 2 சிக்சர்கள் விளாசினார். அடுத்த ஓவரில் இருந்து டு பிளிஸ்சிஸ் அதிரடியை தொடங்கினார். 2-வது ஓவரில் டு பிளிஸ்சிஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார்.
3-வது ஓவரில் டு பிளிஸ்சிஸ் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் 3 ஓவரில் ஆர்சிபி 46 ரன்கள் சேர்த்தது. 4-வது ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசினார்.
5-வது ஓவரில் விராட் கோலி இரண்டு சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து டு பிளிஸ்சிஸ் 18 பந்தில் அரைசதம் அடித்தார். 6-வது ஓவரின் 5-வது பந்தில் டு பிளிஸ்சிஸ் 23 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த வில் ஜேக்ஸ் 1 ரன்னிலும், ரஜத் படிதர் 2 ரன்னிலும், மேக்ஸ்வெல் 4 ரன்னிலும், க்ரீன் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆர்சிபி 9.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.
92 ரன்னுக்கு விக்கெட் இழக்காத ஆர்சிபி 111 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இருந்தபோதிலும் விராட் கோலி ஆட்டமிழக்காமல் ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாடினார்.
6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி 27 பந்தில் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது.
தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். இதனால் பெங்களூரு அணி வெற்றியை நோக்கி சென்றது. தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாட ஆர்சிபி 13.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தினேஷ் கார்த்திக் 12 பந்தில் 21 ரன்களுடனும், ஸ்வப்னில் சிங் 9 பந்தில் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் ஜோசுவா லிட்டில் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- பீகார் மக்களுக்காக அவர்கள் ஏதும் செய்யவில்லை. இந்த முறை பா.ஜனதாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
- மோடியின் பொய் வாக்குறுதிகளை கேட்டு மக்கள் சோர்ந்துவிட்டனர். அவர்கள் உண்மையை பேசுமாறு கேட்கிறார்கள்.
பிரதமர் மோடி இளவரசர் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் ராஷ்டிரிய கட்சி தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பதில் அளித்து கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் டெல்லி மற்றும் பீகாரின் இளவரசர் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் பிரதமர். அவரால் எதையும் சொல்ல முடியும். அவர் எங்களுடைய மூத்த நபர். நாங்கள் சிறிய மக்கள். அவர் என்ன விரும்புகிறாரோ, அதை பேச அவருக்கு உரிமை உண்டு.
அவர் பிர்ஜாடா (pirzada). ஆனால் உண்மையை விட பொய்களைத்தான் நிறைய பேசுகிறார். அவர் தர்பங்காவிற்கு வந்திருக்கிறார். அதனால் பயனுள்ள விசயங்களை பேச வேண்டும். மித்திலா மக்கள் அறிவுஜீவிகள். அவர்கள் பயனுள்ள விசயங்களை கேட்க விரும்புவார்கள். பயனற்ற விசயங்களை கேட்க விரும்பமாட்டார்கள்.
இங்குள்ள மக்களுக்காக அவர்கள் ஏதும் செய்யவில்லை. இந்த முறை பா.ஜனதாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மோடியின் பொய் வாக்குறுதிகளை கேட்டு மக்கள் சோர்ந்துவிட்டனர். அவர்கள் உண்மையை பேசுமாறு கேட்கிறார்கள். பீகாரை அவர்கள் மாற்றாந்தாய் பிள்ளையாகவே பார்க்கிறார்கள். பீகாருக்காக எதையும் செய்யவில்லை. பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
பெரிய பொய்யர் கட்சியைச் (Badka Jhootha Party) சேர்ந்தவர்களை தோற்கடித்து, மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க பீகார் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
- இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்
- காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 இந்திய விமானப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். அதில், 2 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.
காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் ராணுவம் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
- பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு.
- பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ சஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.
சவுக்கு சங்கர் உடனிருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகியோரிடம் பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குஜராத் டைட்டன்ஸ் பவர்பிளேயில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- ஷாருக் கான் 37, டேவிட் மில்லர் 30, டெவாட்டியா 35.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் ஆர்சிபி- குஜராத் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி குஜராத் அணியின் சகா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்திலேயே குஜராத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 3-வது பந்தில் சகா 7 பந்துகள் சந்தித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய சுப்மன் கில் 7 பந்தில் 2 ரன் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் சுதர்சன் 14 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் 19 ரன்கள் எடுப்பதற்குள் குஜராத் 3-விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
4-வது விக்கெட்டுக்கு ஷாருக் கான் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். குஜராத் டைட்டன்ஸ் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 23 ரன்களே அடித்தது.
பின்னர் ஷாருக் கான்- மில்லர் ஜோடி மெல்ல மெல்லி சரிவில் இருந்து மீண்டது. 9 ஓவரில் 49 ரன்னைத் தொட்ட நிலையில், 10-வது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தன.
மில்லர் 20 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷாருக்கான் 24 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர். இதனால் மீண்டும் ஸ்கோரில் தொய்வு ஏற்பட்டது.
குஜராத் அணி 14.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெவாட்டியா, ரஷித் கான் அதிரடியில் இறங்கினர். இருந்தபோதிலும் 18-வது ஓவரில் ரஷித் கான் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் டெவாட்டியா 21 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் 18 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்திருந்தது.
கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை இழக்க குஜராத் டைட்டன்ஸ் 147 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆர்சிபி அணி சார்பில் முகமது சிராஜ், யாஷ் தயாள், விஜயகுமார் வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- 'இங்க நான் தான் கிங்கு'. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ளது.
- 90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும்.
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், 'இங்க நான் தான் கிங்கு'. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில் நடிகர் சந்தானம் பேசியதாவது…
'இங்க நான் தான் கிங்கு' படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை. அவரிடம் நானே காசு கேட்டுதான் போனேன், என்னை அவருக்கு பிடித்தது, வீடு வாங்க காசு கேட்டுப்போனேன், ஆனால் அப்படி செய்யாதீர்கள், படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார்.
அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். என்னுடன் எப்போதும் ஜாலியாக பேசுவார். அவர் என்னிடம் இந்தப்படம் செய்யலாம் என்றார், எனக்கும் பிடித்திருந்தது என்றவுடன் உடனே செய்யலாம் என்றேன். அவருடன் இணைந்து படம் செய்தது சந்தோஷம். படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக இப்படத்தை எடுத்துள்ளார்.
சுஷ்மிதா என் படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார், வாழ்த்துகள். இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார், நன்றி. இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார்.
தம்பி ராமையா சார் மாதிரி இண்டலிஜண்ட் பார்க்க முடியாது, அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் இப்படத்தில் அருமையான பாத்திரம் செய்துள்ளார். ஹீரோயின் லயா நம்ம சேலத்துப் பெண், அவரை பாலிவுட் என நினைத்தேன் நன்றாக நடித்துள்ளார்.
என் படத்தில் எப்போதும் இருக்கும் மாறன், சேஷு, கூல் சுரேஷ், மனோபாலா என நிறைய பேர் இதிலும் இருக்கிறார்கள். 'கட்டா குஸ்தி' படம் ஹிட் தந்துவிட்டு இப்படத்தில் வந்து எங்களுக்காக உழைத்து தந்த செல்லா அய்யாவு சாருக்கு நன்றிகள்.
90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி. என கூறினார்
தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. இதற்கு முன் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை போலவே இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது படத்தின் ப்ரொமோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2018 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் ஐஷ்வர்யா நடிப்பில் வெளியான கனா படத்தில் தர்ஷன் நடித்து பிரபலாமானார்.
- குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் பரிசை வென்றார்.
2018 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் ஐஷ்வர்யா நடிப்பில் வெளியான கனா படத்தில் தர்ஷன் நடித்து பிரபலாமானார். ஒத்தயடி பாதியில் பாட்டின் மூலம் மக்களுக்கு பரிட்சையமாகினார். அதைத் தொடர்ந்து 2019 ஆண்டு வெலிவந்த தும்பா படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் பரிசை வென்றார். அஜித் நடித்த துணிவு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தர்ஷனுடன் ஆர்ஷா சந்தினி பைஜு இணைந்து நடிக்கவுள்ளார். இதற்கு முன் மலையாள திரைப்படமான முகுந்த உன்னி அசோசியேட்ஸ் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் காளி வெங்கட், வினோதினி வைத்தியனாதன் மற்றும் KPY 2 தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
தற்பொழுது தர்ஷனின் அடுத்த படத்திற்கான பூஜை விழா நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதை அறிமுக இயக்குனரான ராஜ்வேல் இயக்கவுள்ளார். பிரேமம் திரைப்படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். பிலே ஸ்மித் ஸ்டூடியோஸ், விவா எண்டர்டெயின்மண்ட் மற்றும் சவுத் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வேக மாறுபாடுகளுடன் யார்க்கர் பந்துகளை மிக நேர்த்தியாக வீசும் திறன் கொண்டவர் நடராசன்
- ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் பேட்டர்கள் அதிரடியாக விளையாடும்போது அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்
வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஆனால் ஐதராபாத் அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.
இந்நிலையில், "டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது" என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார்.
ஜியோ சினிமாவிடம் பேசிய வாட்சன், "வேக மாறுபாடுகளுடன் யார்க்கர் பந்துகளை மிக நேர்த்தியாக வீசும் திறன் கொண்டவர் நடராசன். ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் பேட்டர்கள் அதிரடியாக விளையாடும்போது அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார். நடராஜன் சிறப்பாக விளையாடும் போது, இந்திய கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட்டில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என்று பேசியுள்ளார்.
- மாரி செல்வராஜ் அவரின் 5-வது படத்தை இயக்குகிறார்.
- பா. ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கிறார்.
2018-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இவர் எடுத்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள், மக்களிடையே மிகுந்த பாராட்டை இப்படம் குவித்தது.
இதையடுத்து, 2021-ல் தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கினார். அடுத்ததாக 'வாழை' என்ற படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ். இந்நிலையில் மாரி செல்வராஜ் அவரின் 5-வது படத்தை இயக்குகிறார்.
நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் இதில் நடிக்கின்றனர். பா. ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு வரும் 6ம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.